நாட்டின் பல பகுதிகளில் வெள்ளம் நீடித்து வரும் நிலையில், சிலாபம் நகரில் உள்ள சிறுவர் வைத்தியசாலை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
-
சிலாபம் சிறுவர் வைத்தியசாலையின் கீழ் தளங்களுக்குள் வெள்ள நீர் புகுந்ததால், அங்கிருந்த நோயாளிகள் மற்றும் ஊழியர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதோடு, அவசர நிலை ஏற்பட்டுள்ளது.
-
சிகிச்சைக்காக வந்திருந்த சுமார் 35 சிறுவர்கள் மற்றும் அவர்களுடன் தங்கியிருந்த பெற்றோர்கள் வெள்ளத்தால் சூழப்பட்ட நிலையில், மிகவும் இக்கட்டான சூழலுக்கு முகம் கொடுத்தனர்.
-
வைத்தியசாலை நிர்வாகம் உடனடியாகச் செயற்பட்டு, கீழ் மாடியில் இருந்த சிறுவர்களையும் பெற்றோர்களையும் பத்திரமாக இரண்டாம் மாடிக்கு மாற்றியுள்ளனர்.
இருப்பினும், வைத்தியசாலைக்குள் வெள்ளம் புகுந்ததால் அத்தியாவசியச் சேவைகளுக்கும், உணவளிப்பதற்கும் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும், நிலைமை மோசமடையுமானால் மேலதிக உதவிகள் தேவைப்படலாம் எனவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
