ஸ்ரீபாத வனப்பகுதியை அண்டிய நல்லதண்ணி – எஹெலகனுவ பகுதியில் இன்று (நவம்பர் 30) மண்சரிவு ஏற்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த மண்சரிவின் விளைவாக, அப்பகுதியில் அமைந்திருந்த ஒரு வியாபார தளம் கடுமையாகச் சேதமடைந்துள்ளதாகப் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
பிரதேசத்தில் தொடர்ச்சியான மழை காரணமாக மண்சரிவு அபாயம் நீடித்து வருவதால், அப்பகுதி மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
