டித்வா புயலின் (DITWA Cyclone) தாக்கத்தினால் நாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்களினால் பதிவான மரணங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து, 366 ஆக உயர்ந்துள்ளது என அனர்த்த முகாமைத்துவ நிலையம் (Disaster Management Centre – DMC) இன்று (01) மாலை 4 மணிக்கு வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த அனர்த்தங்களில் 367 பேரை இன்னும் காணவில்லை எனவும், அவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக இன்று காலை 9 மணிக்கு வெளியான அறிக்கையில் 355 மரணங்களும், 366 காணாமல் போனவர்களும் பதிவாகியிருந்த நிலையில், இந்தச் சமீபத்திய தகவல்கள் உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதைக் காட்டுகிறது.
