Tuesday, June 30, 2026

உள்நாடு

மலையகம்

இந்தியா

கலஹாப் பகுதியில் கண்ணீர் – 8 பேரின் சடலங்கள் மீட்பு

கலஹா (Galaha) தெல்தோட்ட (Deltota) லூல்கந்துர (Loolkandura) பிரிவின் அப்பகொனவ (Appakonawa) பகுதியில் ஏற்பட்ட பாரிய மண்சரிவு அனர்த்தத்தில் மொத்தம் 11 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை 8 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன எனத் தகவல் வெளியாகியுள்ளது.

மீதியுள்ள மூன்று சடலங்கள் இன்னும் மீட்கப்படாத நிலையில், அப்பகுதியில் மீட்புப் பணிகள் தொடர்கின்றன.

இந்தச் சம்பவத்தின் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், மீட்கப்பட்ட 8 சடலங்களும் அப் பகுதியிலுள்ள இளைஞர்கள் மற்றும் மக்களாலேயே மீட்கப்பட்டு, உடனடியாக இறுதிக் கிரியைகள் நடத்தப்பட்டுள்ளன. உத்தியோகபூர்வ மீட்புக் குழுக்கள் சிரமங்களுக்கு மத்தியில் மீட்புப் பணிகளை முன்னெடுத்துவரும் நிலையில், மக்களின் இந்த அவசரச் செயற்பாடு அனர்த்தத்தின் தீவிரத்தைக் காட்டுகிறது.

தொடர்புடைய செய்திகள்

உலகம்

பிரபலமானவை