Tuesday, June 30, 2026

உள்நாடு

மலையகம்

இந்தியா

கண்டி மண்சரிவு சோகம் – 24 சடலங்கள் மீட்பு!

கண்டி மாவட்டத்தில் ரம்புகேவெல (Rambukewela) மற்றும் சரசவிகம (Sarasawigama) ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் இதுவரை 24 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 45 பேர் காணாமல் போயிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுவதாகப் பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.

மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு வரும் நிலையில், ரம்புகேவெலவின் முதுனேகட பகுதியில் காணாமல் போன 43 பேரில் 10 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. அதேபோல், சரசவிகம பகுதியில் மண்சரிவில் புதையுண்ட வீடுகளிலிருந்து 14 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

காணாமல் போனவர்களைத் தேடும் பணிகளை இலங்கை இராணுவம், பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். எனினும், தொடரும் வானிலைச் சவால்கள் காரணமாக மீட்புப் பணிகள் கடும் சிரமத்திற்கு மத்தியில் நடைபெறுகின்றன.

தொடர்புடைய செய்திகள்

உலகம்

பிரபலமானவை