ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ, இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுடன் நேற்று சந்திப்பு ஒன்றை மேற்கொண்டார்.
இந்த சந்திப்பு இந்திய இல்லத்தில் நடைபெற்றதாக இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தனது X சமூக ஊடக கணக்கில் பதிவிட்டுள்ளது.
இந்த கலந்துரையாடலின்போது, இந்தியா மற்றும் இலங்கையின் முன்னேற்றங்கள் குறித்தும், இரு நாடுகளுக்கு இடையிலான பரந்த இருதரப்புப் பங்காண்மை குறித்தும் விவாதிக்கப்பட்டது.
