Tuesday, June 30, 2026

உள்நாடு

மலையகம்

இந்தியா

ஜி.வி. பிரகாஷ் – சைந்தவி 💔 முடிவுக்கு வந்தது 11 ஆண்டு பந்தம்!

தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராகவும்,, நடிகராகவும் வலம் வருபவர் ஜி.வி. பிரகாஷ் குமார். இவர்,, கடந்த 2013-ம் ஆண்டு தனது பள்ளித்தோழியும்,, தமிழ் சினிமா பின்னணிப் பாடகியுமான சைந்தவியை திருமணம் செய்து கொண்டார். இந்தத் தம்பதிக்கு ஆன்வி என்ற பெண் குழந்தை உள்ளது.

இதனிடையே ஜி.வி.பிரகாஷ் – சைந்தவி இருவரும் பிரிந்து வாழ முடிவு எடுத்து இருப்பதாக கடந்தாண்டு மே மாதம் அறிவிப்பு வெளியிட்டனர்.

இதையடுத்து ஜி.வி.பிரகாஷ் குமார்,, சைந்தவி இருவரும் பரஸ்பரம் பிரிவதாக விவாகரத்து கோரி சென்னை முதலாவது கூடுதல் குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு குடும்பநல நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கு விசாரணைக்கு ஆஜரான ஜி.வி.பிரகாஷ்,, சைந்தவி நேரில் ஆஜராகி இருவரும் மனமுவந்து பிரிவதாக தெரிவித்தனர்.

வழக்கு விசாரணையின்போது,, குழந்தையை சைந்தவி கவனித்துக்கொள்வதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என ஜி.வி.பிரகாஷ் நீதிபதி முன் தெரிவித்தார்.

இதையடுத்து ஜி.வி.பிரகாஷ்,, சைந்தவி ஆகிய இருவருக்கும் விவாகரத்து வழங்கி நீதிபதி தீர்ப்பளித்தார்.

தொடர்புடைய செய்திகள்

உலகம்

பிரபலமானவை